நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளித்திடுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்பதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, ஏழை மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளதாகவும், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்பதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Tags :