பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்-திருச்சி வேலுச்சாமி பேட்டி

by Editor / 25-02-2023 11:59:51pm
 பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்-திருச்சி வேலுச்சாமி பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் பணம் இருப்பதால் பணப்புழக்கம் இருக்கிறது என திருவாரூரில்  திருச்சி வேலுச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்:

திருவாரூரில் நடைபெற்ற மா.சோ விக்டர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திருச்சி வேலுச்சாமி செய்தியாளர்களை சந்தித்தபோது ஈரோட்டில் பணப்புழக்கம் இருப்பது குறித்த கேள்விக்கு பணம் இருப்பதால் புழக்கம் இருக்கிறது.தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் என்ன செய்கிறது என்று கூறினார்.

மேலும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் சீமானுக்கு அது பற்றி தெரியவில்லை அதனால் அவர் அவ்வாறு சொல்கிறார் தெரியும்போது சீமானும் எங்களுடன் சேர்ந்து பயணிப்பார் அந்த காலம் விரைவில் வரும்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸில் வெற்றி உறுதியாகிவிட்டது என்ன ஓட்டு வித்தியாசம் என்று தான் பார்க்க வேண்டும்.

ஒற்றைத் தலைமை இரட்டை தலைமை என்பது இல்ல அதிமுக பா.ஜ.க வோடு சேராமல் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்றார்.
 

 

Tags :

Share via