கரோனா தொற்று குறைந்ததால் எல்லைகள் திறப்பு

by Editor / 19-04-2021 03:57:47pm
கரோனா தொற்று குறைந்ததால் எல்லைகள் திறப்பு

ஒரு வருடத்திற்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தங்கள் எல்லையை திறந்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ' கரோனா பாதிப்பு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து இரு நாடுகளிலும் எந்த கட்டுப்பாடுகளின்றி எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் விமான நிலையங்களில் இரு நாட்டை சேர்ந்தவர்களும் கண்ணீருடன் கட்டி தழுவி அணைக்கும் காட்சிகள் நிரம்பி வழிகின்றன' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்ததைத் தொடர்ந்து நியூசிலாந்து - ஆஸ்திரேலிய எல்லைகள் கட்டுப்பாடுகளுடன் மூடப்பட்டன.

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்று குறைந்ததால் எல்லைகள் திறப்பு

ஒரு வருடத்திற்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவும் தங்கள் எல்லையை திறந்துள்ளன.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், ' கரோனா பாதிப்பு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து இரு நாடுகளிலும் எந்த கட்டுப்பாடுகளின்றி எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் விமான நிலையங்களில் இரு நாட்டை சேர்ந்தவர்களும் கண்ணீருடன் கட்டி தழுவி அணைக்கும் காட்சிகள் நிரம்பி வழிகின்றன' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்ததைத் தொடர்ந்து நியூசிலாந்து - ஆஸ்திரேலிய எல்லைகள் கட்டுப்பாடுகளுடன் மூடப்பட்டன.

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via