சென்னையில் பயன்பாட்டுக்கு வந்த தாழ்தளப் பேருந்துகள்.
சென்னை மாநகரில் மக்கள் பயணம் மேற்கொள்ள மாநகரப் பேருந்துகளே முக்கிய பங்காற்றி வருகின்றன. மக்கள் சிரமமின்றி பயணித்திட ஏதுவாக, முதலமைச்சர் உத்தரவின்படி போக்குவரத்துத்துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.அந்த வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தாழ்தளப் பேருந்துகள் உட்பட 100 புதியப் பேருந்துகளின் சேவையை சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்.மேலும், புதியப் பேருந்தில் சிறிது தூரம் பயணித்து, அதன் உட்கட்டமைப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்யப்பட்டது.
Tags : சென்னையில் பயன்பாட்டுக்கு வந்த தாழ்தளப் பேருந்துகள்.







.jpg)











