வெடி விபத்து: ஊழியர் பலி

by Staff / 27-01-2023 05:24:12pm
வெடி விபத்து: ஊழியர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் பகுதியில், வாகனங்களின் புகைபோக்கிகளுக்கு ரசாயன கலவை பூசும், 'ஆர்பிட் கோடிங்' என்ற பெயரிலான தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்கு, கடந்த 20ம் தேதி இரவு, அதிக அழுத்தம் காரணமாக, ரசாயன கலவையை பீய்ச்சி அடிக்கும் 'பாய்லர்' இயந்திரம், பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி, தீப்பற்றியது.இதில், காட்டரம்பாக்கத்தைச் சேர்ந்த மதன்குமார், 26, திருவள்ளூரைச் சேர்ந்த சேனாதிபதி, 36, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ், 19, முத்துராஜ், 26, ரஞ்ஜித், 26, ஆகிய ஐந்து ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.இவர்கள் ஐந்து பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சேனாதிபதி சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.இதுகுறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via