மருமகனை செருப்பால் அடித்த மாமியார்...

by Admin / 09-08-2021 05:26:57pm
மருமகனை செருப்பால் அடித்த மாமியார்...

 

உத்திரபிரதேசத்தில் மருமகனை, மாமியார் நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்திரபிரதேச மாநிலம் கோட்வாலி அடுத்த மஜ்ரா பண்டித்பூர்வா பகுதியை சேர்ந்த சந்த்பாபு என்பவருக்கும், பீலமஹூவா கிராமத்தில் வசிக்கும் ஹினா பானோவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

 இதற்கிடையில் கடந்த இரண்டு மாதங்களாக கணவர் சந்த்பாபுவிற்கும் மனைவி ஹினா பானோவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த மனைவி ஹினா பானோ வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மேலும் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட கணவன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து தனது தனிப்பட்ட வேலைகளுக்காக ஆட்சியர் அலுவலகம் சென்ற சந்த்பாபு, அதேபகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாக சாலையில் தனது மாமியாரை சந்தித்துள்ளார். மகளுடன் தகராறில் ஈடுபட்ட மருமகன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த மாமியார், மருமகனை நேரில் கண்டதும் அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
 
மாறி மாறி இருவரும் வாய் தகராறில் ஈடுபட்டு வந்ததால் அந்தபகுதியில் பதற்றம் நிலவியது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் உச்சிக்கே சென்ற மாமியார், மருமகன் என்றும் கூட பார்க்காமல் தனது செருப்பை கழற்றி அவரை அனைவர் முன்பாகவும் நடுரோட்டில் வைத்து அடித்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதனை வீடியோ பதிவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சந்த் பாபு, மாமியார் தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.  

 

Tags :

Share via