ரேஷனில் தேங்காய் எண்ணெய் - அமைச்சர் உறுதி

by Staff / 22-02-2024 03:56:30pm
ரேஷனில் தேங்காய் எண்ணெய் - அமைச்சர் உறுதி


தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே போல், பாமாயில் போன்று, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயையும் விநியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகளும், மக்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தேங்காய் எண்ணெய் விற்பனை திட்டம் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கம்படும் என்று உறுதியளித்துள்ளார்.

 

Tags :

Share via