மீனாட்சி அம்மன் கோவில் இணைய தள சேவை சாிசெய்யப்பட்டு மீண்டும் செயல்படத் துவங்கியது.
மதுரை அருள் மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர். கோவில் சார்பாக இணைய தளம் செயல்பட்டு வந்தது அதில் கோவில் தொடர்பாக அனைத்து நிகழ்ச்சி நிர்வாக தகவல் இருக்கும்.. இந்நிலையில், இன்று இணையதள சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதனை சீர் செய்யும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் இறங்கி உள்ளனர். எதனால் கோளாறு ஏற்பட்டது எனவும் விசாரணை நடந்து வருகிறது ஐந்து மணி நேரத்திற்குள்.இணையதள சேவை சாிசெய்யப்பட்டு மீண்டும் செயலபடத் துவங்கியது.
Tags :