காதல் திருமணம்.. 6 மாதத்தில் தற்கொலை

by Staff / 22-02-2024 04:10:54pm
காதல் திருமணம்.. 6 மாதத்தில் தற்கொலை

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை சேர்ந்த கஜப்பிரியா(35) ஆசிரியராக பணியாற்றிவந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் கார்த்திக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதலால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். காவலர் குடியிருப்பில் வசித்துவந்த இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கஜப்பிரியா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via