தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்

by Editor / 02-03-2022 02:29:08pm
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 22-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தல் மூலம் 1,373 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களும், 3,843 நகராட்சி வார்டு உறுப்பினர்களும், 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களும் என 12,819 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவியேற்கும் நிகழ்வு அந்த அந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இன்று நடைபெற்றது.
 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்
 

Tags : Winners of urban local body elections across Tamil Nadu took office

Share via