வணிக வளாக கட்டிடம் இடிந்த விவகாரம். கட்டிடத்தை இடிக்க உத்தரவு.
திருவாரூர் குளத்துபட்டறை வீதியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று காலை இடிந்து விழுந்தது.பொதுமக்கள் மற்றும் அருகில் குடியிருப்பவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டிடம் உள்ளதால் கட்டிடத்தை 15 தினங்களுக்குள் கட்டிட உரிமையாளரே இடித்து அகற்ற நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவு. தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் வணிக வளாக கட்டிடத்தை இடித்து அதற்கான செலவின தொகையினை உரிமையாளரிடம் வசூல் செய்யும் எனவும்'மேலும் உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் பிரபாகரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
Tags : Business complex building demolition affair. Order to demolish the building.