மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு

by Staff / 30-08-2023 01:03:25pm
மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு

மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மிசோரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆட்சியை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தலை சந்தித்த இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி பேசியுள்ள நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு, பாஜக அஞ்சுகிறது. மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் முடிவை, மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via