12 வயது சிறுவனை கொன்ற 15 வயது சிறுமி
12 வயது சகோதரன் மீது தனது பெற்றோர் அதிகமாக பாசம் காட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 15 வயது சகோதரி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பல்லப்கரில் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. செவ்வாய்கிழமை மாலை பெற்றோர் வேலை முடிந்து திரும்பியபோது மகன் வீட்டிற்குள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பெற்றோர் வெளியே சென்ற போது மூத்த மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :