கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு

by Staff / 19-10-2024 03:33:54pm
கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 247 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24-ல் அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75/- விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் 1.20 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via