அதிக வாகனங்களில் சென்ற ஓபிஎஸ் மீது வழக்கு

by Staff / 06-04-2024 03:30:40pm
அதிக வாகனங்களில் சென்ற ஓபிஎஸ் மீது வழக்கு

ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக கூட்டணி சுயேட்சை வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சி.கே மங்கலம், இளங்குன்றம், ஊரணிக்கோட்டை, பனங்குளம், பாண்டுகுடி, திருவாடானை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது எஸ்.பி.பட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்த போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு மேல் கூடுதல் வாகனங்களுடன் சென்று வாக்கு சேகரித்ததாக பறக்கும் படை அலுவலர் வீரராஜா புகாரின் பேரில் திருவாடானை போலீசார் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via