தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியா யோகா போட்டி -வெங்கலம் பதக்கம் கடம்பூர் ராஜூயிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியா யோகா போட்டி வெங்கலம் பதக்கம் பதக்கத்தில் வெற்றி பெற்ற கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூயிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.
தாய்லாந்தில் பாங்காக்கில் வைத்து மே கடந்த 18,19 ஆகிய தேதிகளில் மூன்றாவது பசுபிக் ஆசிய யோகா போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் தாய்லாந்து,இந்தியா,ஸ்ரீ லங்கா, நேபாளம்,பூட்டான்,தென் ஆப்பிரிக்கா, பர்மா மங்கோலியா உள்ளிட்ட எட்டு நாடுகள் பங்கேற்றன இதில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாடு உள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்த கணேஷ் மூர்த்தி,30 முதல் 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில் யோகப் போட்டி கலந்து கொண்டு மூன்றாவது பரிசாக வெண்கல பதக்கம் வென்றார்.
கோவில்பட்டி பெருமை சேர்க்கும் விதமாக வெண்கலப் பதக்கம் வெற்றி பெற்ற கணேஷ் மூர்த்தி முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூயிடம் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்கள் பெற்றனர்.இந்நிகழ்வில் தமிழ்நாடு யோகா சங்கம் செயலாளர் மாரியப்பன், வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் கவியரசன்,மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி,கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags :