பள்ளியில் பாலியல் தொல்லை !

by Editor / 24-07-2021 09:00:07pm
பள்ளியில் பாலியல் தொல்லை !


நாடு இன்று இருக்கும் இருப்பில் இப்படி ஒரு சம்பவமா என பெற்றோர்கள் தலையில் அடித்துக் கொள்ள்கின்றனர். ஏன்டா இப்படி பண்ரீங்க,,நல்ல சம்பளம், கொள்ளை பீஸ் ..என்று பலர் திட்டி தீர்க்கின்றனர் .


சென்னை கே.கே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து எழுதிய புகார் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


 அந்தப் பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றியும் வருகிறார். அவர் தொடர்ச்சியாக மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது, பாலியல் அர்த்தங்களுடன் பேசுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வகுப்பறையிலேயே வைத்து மாணவிகளிடம் பாலியல் இரட்டை அர்த்தங்களுடன் கேள்விகளைக் கேட்பது, மாணவிகளின் உடல் அமைப்பு பற்றி விமர்சிப்பது, அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது ஆகியவற்றில் அவர் ஈடுபட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.ஊரடங்கு காலத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்காக வந்த ஆசிரியர், கேமிரா முன்பாக வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படி தெளிவாக புகார் இருப்பதால் நிச்சயம் இது உண்மை எனலாம். கிறுக்கு பிடித்து தகாத செயலில் ஈடுபடும் ஆசிரியர் அந்த தொழிலையே கேவலப்படுத்தி விட்டார். இத்தனைக்கும் இப் பள்ளி பெரிய உதார் என்பது வேடிக்கை. அத்தனை சுலபத்தில் சீட் கிடைக்கத்தாம். இப்போதுதான் நிறைய தகவல்கள் வெளிவருகிறது. 1962 வாக்கில் அப்போது காமராஜர் இப்பள்ளியை பாலர்களுக்கு திறந்து வைத்துள்ளார்.

நடிகர் குடும்பம் ஒட்டுமொத்தமாக இடத்தை ஆக்கிரமித்து இன்று கோடி கோடியாக கொள்ளை அடித்துள்ளது அம்பலமாகி இருக்கிறது. கின்று தோண்ட பூதம் கிளம்பிய கதையாக பல புகார்கள் குவிகின்றன. பள்ளி இல்லாத நேரத்திலேயே இப்படி தொல்லை கொடுத்தவன் பள்ளி நடக்கும்போது எப்படி நடந்திருக்கலாம் என்பது இப்போது புரிகிறது. எனவே தயவு பார்க்காமல் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும்  எத்தனை பேர் தொடர்பு என்று தமிழக அரசு விசாரிக்க வேண்டும். 
 

 

Tags :

Share via