குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு -அருவிகளில் வெள்ளப்பெருக்கு சீரான பிறகு குளிப்பதற்கு அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக இன்று திடீரென்று குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருவிகளில் வெள்ளப்பெருக்கு சீரான பிறகு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















