அட்லி மீது மீண்டும் கதை திருட்டுப் புகார்

by Admin / 05-11-2022 02:08:55pm
அட்லி மீது மீண்டும் கதை திருட்டுப் புகார்


இயக்குனர் அட்லி சாருஹானை வைத்து ஜவான் இநதி படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் கதை விஜயகாந்த்நடிப்பில் உருவான பேரரசு படத்தின் கதையைத்தழுவி எடுக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர். தமிழ்நாடு தயாரிப்பாளர்சங்கத்திலும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து அட்லிக்குதயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது அதில் வரும் 9ஆம் தேதி இது குறித்து விவாதிக்கயுள்ளதாகவும் அதற்கு முன் பதிலளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அட்லி இதற்கு முன்பு  எடுத்த ராஜாராணிபடம் மணிரத்தினத்தின் மெளன ராகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் விஜயகாந்தின் சத்திரியனை விஜய் நடித்தமெர்சல் படத்தின் கதை தழுவியது என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது ஜவானும் சிக்கியுள்ளது. அட்லியின் திரைப்பயணம் தொடர் சிக்கலுக்குரியதாகியுள்ளது .அட்லி  இயக்குனர் சங்கரின்உதவியாளராகப்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி மீது மீண்டும் கதை திருட்டுப் புகார்
 

Tags :

Share via