கோவில் விழாவில் நாகரீக ஆடைகளை அணிய வேண்டும்-மதுரை உயர்நீதிமன்ற கிளை
மதுரை,மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கரக ஆட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டுமதுரை உயர்நீதிமன்ற க்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இம்மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை,நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமோ,இரட்டை அர்த்த பாடல்களோ இடம் பெறக்கூடாது என்றும் கரகாட்டததில்நாகரீக உடைகளை அணிய வேண்டும் என்றும் அரசியல்,சாதி,மதம் சார்ந்த புண்படுத்தக்கூடிய பாடல்கள்,நடனம் அமையக்கூடாது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்போர் குட்கா,மது பானம் அருந்தியிருக்கக்கூடாது என்றும் பல்வேறுகட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கியுள்ளது.
Tags :