விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் பலி

by Staff / 08-09-2023 04:15:47pm
விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் பலி

சேந்தமங்கலம் அடுத்த முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சுதாகரின் உறவினர்கள், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர். மாலை கிடா வெட்டு விருந்து நடைபெற்றது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது. இதனால் அவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சுதாகர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீட்டும் கிடா விருந்துக்கு திரும்பினார். இந்நிலையில் அவரை அதிகளவு விஷ வண்டுகள் கடித்ததாக தெரிகிறது. இதனால் உடலில் வேகமாக விஷம் பரவியதில் கிடா விருந்து பந்தலில் மீண்டும் சுதாகர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர் கதறி அழுதனர். இதனிடையே மற்ற 11 பேரும் நாமக்கல், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கிடா விருந்து நிகழ்ச்சியில் விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via