மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவர்: பயங்கரம்

by Staff / 26-05-2024 05:01:54pm
மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவர்: பயங்கரம்

ஆத்தூர் அருகே கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த மனைவியை கணவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள மேல ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மாரி (33). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் பொன்மாரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது கணவர் கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அவர் கள்ளத் தொடர்பை கைவிட வில்லயாம். இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்மாரி உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via