வீடு புகுந்து பெண் அரிவாளால் வெட்டிக் கொலை
தர்மபுரியில் வீடு புகுந்து பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பென்னாகரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமி (50) என்பவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள், உடலை விவசாய நிலத்தில் தூக்கி வீசியெறிந்துவிட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதமா அல்லது பணம், நகைக்காக கொலையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
Tags :



















