தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவுடன் நிறைவு.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் இந்த ஆண்டு முதல்முறையாக மகா கும்பாபிஷேக விழாவுடன் ஆன்மீக விழா நேற்று முன்தினம் துவங்கியது
நேற்று அரசியல் விழாவும் பொதுமக்கள் பால்குடம் முளைப்பாரி அழகு குத்தி பாதயாதிரியாக மேளதாளங்களுடன் ஆரவாரத்துடன் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இன்று குருபூஜை விழாவில் தமிழக அமைச்சர்கள் அதிமுகமுன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலைமதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்திற்கு நேரில்வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மாலையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி உள்ளாட்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று 228 பயனாளிகளுக்கு ரூ 23.66 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
Tags :