லாரி மோதி 3ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதியதில் 3ஆம் வகுப்பு மாணவி ஜனுஷிகா தனது தந்தையின் கண் முன்னே உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை ஜம்புலிங்கம் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :