வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற நினைத்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் ஈ பி எஸ்

by Editor / 25-08-2022 11:55:15am
வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற நினைத்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் ஈ பி எஸ்

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற நினைத்தால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்தால் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என கூறிய அவர் கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டம் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் ஆனைமலை நல்லாறு திட்டம் மெட்ரோ ரயில் திட்டம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via