வீட்டில் தோஷம் கழிக்க பணம் கேட்டு மோசடி செய்த போலி சாமியார் கைது

by Editor / 25-08-2022 11:50:54am
வீட்டில் தோஷம் கழிக்க பணம் கேட்டு மோசடி செய்த போலி சாமியார் கைது

கடலூர் மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார் கடலூரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் வீட்டிற்கு வந்த 5 பேர் அவரது வீட்டில் தோசம் உள்ளதெனவும் தோஷத்தை நிவர்த்தி செய்ய 45 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர். ஜோதிடம் 3000 ரூபாய் பெற்றுக்கொண்டு மீதி பணத்தை தயார் செய்யும்படி சொல்லி சென்று உள்ளனர். சந்தேகமடைந்த ஜோதிமணி அளித்த தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகவேந்திரா சிட்டி செல்லும் வழியில் தேநீர் கடையில் நின்றிருந்த போலீசார் ஜெகதீஸ் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via