பைக் வேன் மோதல்ஒருவர் பலி.

by Staff / 27-01-2023 05:12:44pm
பைக் வேன் மோதல்ஒருவர்  பலி.

பவானி, சலங்க பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகன் செல்வராஜ் (38). கட்டட மேஸ்திரி ஆக பணிபுரிந்து வரும் இவர், நேற்று இரவு காஞ்சி கோவிலில் வேலை முடிந்து தனது வீட்டுக்கு செல்வதற்காக, கவுந்தப்பாடி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று, இவரது பைக் மீது பலமாக மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் செல்வராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via