பண பரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்டபோது சிக்கிய ஏகே47 துப்பாக்கிகள்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுரங்க ஏலம் தொடர்பான பணபரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்டபோது ஏகே47 துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சிக்கியுள்ளன .பிரகாஷ் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் பல மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு சட்டவிரோதமாக இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Tags :