ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு- 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

by Editor / 05-02-2025 10:05:02am
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு- 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த 2024ம் ஆண்டு த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (பிப்ரவரி 5ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த இடைத்தேர்தலை முக்கிய கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடுகிறது. இதை எதிர்த்து திமுக கூட்டணி பெரும் பலத்துடன் களமிறங்கி உள்ளது. சாதாரண நாம் தமிழர் கட்சியை திமுக எளிதாக வெற்றி பெறும் நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் சூரம்பட்டி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தனது வாக்கினை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், 237 வாக்குச்சாவடிகளும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாக்குப்பதிவைத் தொடர்ந்து. பிப்.8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.இன்றைய வாக்குப்பதிவுக்காக அந்த தொகுதியில், 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் , பட்டாலியன் போலீசார் மற்றும் போலீசார் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கி 17ம் தேதியுடன் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையுடம் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் திமுக, நாதக உட்பட 46 பேர் களத்தில் உள்ளனர்.

 

Tags : ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு- 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share via