அனைத்து விண்ணப்பங்களில் தாய் பெயரை குறிப்பிட கோரி வழக்கு

by Editor / 04-09-2021 04:48:10pm
அனைத்து விண்ணப்பங்களில் தாய் பெயரை குறிப்பிட கோரி வழக்கு

அரசு துறைகளில் அனைத்து விண்ணப்பங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவு ஏற்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சான்றிதழ்கள், உரிமங்கள், ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிட வகையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. திருமண பத்திரிகைகளில் தாய் பெயரை குறிப்பிடுவது போல அரசு ஆவணங்களிலும் தாய் பெயரை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via