,இலங்கையிலிருந்து தொடர்ந்து  மக்கள் தனுஷ்கோடி வழியாக வருவதுஅதிகரித்துள்ளது

by Admin / 10-04-2022 06:59:46pm
,இலங்கையிலிருந்து தொடர்ந்து  மக்கள் தனுஷ்கோடி வழியாக வருவதுஅதிகரித்துள்ளது

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகாரணமாக பெட்ரோல்,டீசல் ,காய்கறிகள்,மளிகைப் பொருள்கள்,பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பெரும்  அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.இந்தியா இரண்டு கட்டமாக பல்வேறு உதவிகளை செய்து அந்நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.தமிழக அரசும் தமிழர்களுக்கு உதவிட மத்திய அரசிடம் அனுமதி வேண்டியுள்ளது. இந்நிலையில்,இலங்கையிலிருந்து தொடர்ந்து  மக்கள் தனுஷ்கோடி வழியாக வருவது அதிகரித்துள்ளது.ஏற்கனவே வந்தவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று  தனுஷ்கோடி வழியாக படகுகளில்19 பேர் வந்திருப்பதாக தகவல்.உரிய விசாரணைக்குப்பின்னர் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்படஉள்ளதாக தெரிகிறது.

,இலங்கையிலிருந்து தொடர்ந்து  மக்கள் தனுஷ்கோடி வழியாக வருவதுஅதிகரித்துள்ளது
 

Tags :

Share via