காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்

by Staff / 21-10-2023 03:37:17pm
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 15-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், போர்ச்சூழலில் முதல்முறையாக எகிப்தின் ரஃபா எல்லையில் இருந்து மனிதாபிமான உதவிப் பொருட்கள் காசாவிற்குள் நுழைந்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி தவித்து வருகின்றனர். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கிட சர்வதேச நாடுகள் குரல் கொடுத்த நிலையில், மனிதாபிமான உதவிப்பொருட்கள் அடங்கிய வாகனங்கள் எல்லையை கடந்து காசாவிற்குள் நுழைந்தன.

 

Tags :

Share via