தொலைதூர கல்வி திறந்த வெளியில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் திட்டம் பொருந்தாது தமிழக அரசு

by Editor / 27-06-2022 05:00:07pm
தொலைதூர கல்வி திறந்த வெளியில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் திட்டம் பொருந்தாது தமிழக அரசு

 தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் திட்டம் பொருந்தாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. குழந்தை திருமணத்தை தடுப்பது கல்வி இடை நிற்றலை குறைப்பது போன்ற நோக்கங்களுக்காக உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு  இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உயர்கல்வி பயில வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo