கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

by Staff / 22-03-2023 03:03:16pm
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை சூப்பிரண்டு சிவசுப்புவில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ​​தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகில் மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்த தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (வயது 24), முத்துப்பாண்டி மகன் ரமேஷ் கண்ணன் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உடனடியாக போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via