சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்

by Staff / 08-01-2024 12:00:13pm
சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீரஜ் என்ற இளைஞரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 9ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூரத்தை வீடியோ எடுத்து உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, நீரஜின் உறவினர்களான குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் இரண்டு வருடங்களாக சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளனர். அந்த வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via