குரங்கை கொலை செய்த 3 பேர் கைது

by Staff / 20-09-2023 12:34:40pm
குரங்கை கொலை செய்த 3 பேர் கைது

உத்திர பிரதேசத்தில் உள்ள புலந்த்ஷாஹரில் நடந்த கொடூர ஒன்று சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குலாவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட செகந்திராபாத் சாலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் குரங்கு ஒன்றை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அதன் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவை குற்றவாளி அகில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்த்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via