மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்

by Editor / 28-06-2022 12:49:02pm
மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக மந்திரவாதி உட்பட இரண்டு பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான மாணிக் எல்லாப்பா அவரது சகோதரர் கோபால் எல்லாப்பா ஆகிய ஒன்பது பேர் வீட்டில் இருந்து இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர் மேலும் கடன் தொல்லை கொடுத்து 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 13 பேர் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணை மந்திரவாதியான அவரது டிரைவர் முகமது அலி ஆகிய இரண்டு பேரால் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via