முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். “எனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்கிறது. மக்களவையில் அவரது குரல் தொடர்ந்து வலிமையாக ஒலிக்கட்டும்” என கூறி இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.
Tags :