காரைக்கால் மீனவர்கள் 12 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தஇலங்கை கடற்படை .
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அடாவடி நடவடிக்கை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : காரைக்கால் மீனவர்கள் 12 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தஇலங்கை கடற்படை .



















