ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 105வது பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வத்தால் அமைக்கப்பட்ட அதிமுக கொடி கம்பத்தில் ஈபிஎஸ் தரப்பினர் கொடியேற்ற தயார் செய்து வைத்திருந்த நிலையில், அதனை ஓபிஎஸ் தரப்பினர் ஏற்றி வைத்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது மோதலாக வெடித்தது. அப்போது முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ஓபிஎஸ்-ஆல் நிறுவப்பட்ட கொடி கம்பத்தை ஆட்டி சேதப்படுத்த முயன்றார். அப்போது எடப்பாடி ஒழிக என்று ஓபிஎஸ் தரப்பினரும், ஓபிஎஸ் ஒழிக என்று எடப்பாடி தரப்பினரும் கோஷமிட்டனர்.
Tags :