மருமகளை பாலியல் துன்புறுத்தல் செய்த மாமனார்

by Staff / 26-05-2024 05:09:05pm
மருமகளை பாலியல் துன்புறுத்தல் செய்த மாமனார்

உ.பி., மாநிலம், பண்டா மாவட்டத்தில் உள்ள பசந்தா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர் தனது மருமகளை தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். தன்னுடன் உறவு கொண்டால் மாதம் ரூ.5 ஆயிரம் தருவதாகவும், இல்லையேல் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் தந்தைக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது மாமனார் மீது போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via