எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 

by Editor / 25-07-2023 09:28:51am
 எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 9 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 

இந்திய கடல் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பது ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுந்தீவு அருகே கைதான 9 மீனவர்களையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேர் இதுவரை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via