மல்யுத்த வீரர் மரணம்
பீகார் மாநிலம் லக்ஷிசாரயில் துன்பியல் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற மல்யுத்தம் போட்டி ஒன்றில் திரிபுராரி யாதவ், பவண் யாதவ் என்ற இரண்டு பேர் பங்கேற்று விளையாடி வந்தனர். இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வந்த நிலையில், பவண், திரிபுராரி யாதவின் கழுத்தில், தன் கால்களை வைத்து நெருக்கியபோது, திடீரென்று திரிபுராரி மேடையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து திரிபுராரியின் பெற்றோர், இது கொலை என கூறி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Tags :