குன்னூரில் கன மழையால் நெடுஞ்சாலையில் மண் சரிவு

by Staff / 23-11-2023 05:23:20pm
குன்னூரில் கன மழையால் நெடுஞ்சாலையில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவந்த நிலையில் புதன்கிழமை இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்தது. இதில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 -ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் விழுந்துகிடப்பதால் வியாழக்கிழமை அதிகாலை முதலே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் வரும் 25ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.

 

Tags :

Share via