350 ரூபாய்க்காக இளைஞர் 60 முறை குத்திக் கொலை
தலைநகர் டெல்லியில் பிரியாணிக்கு பணம் தராததால் 18 வயது இளைஞனை மைனர் சிறுவன் ஒருவன் சுமார் 60 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை கொலை செய்துவிட்டு சடலத்தின் அருகில் நின்று மைனர் சிறுவன் நடனமாடியுள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வெறும் 350 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலான நிலையில், சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :