மதுரையில் விற்பனைக்காக வைத்திருந்த 60கிலோ இறைச்சி பறிமுதல்-அபராதம்
காந்தி ஜெயந்தியை (அக்டோபர்-2) முன்னிட்டு இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மாநகரில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் முருகன் மற்றும் நந்தகுமார் திடீரென ஆய்வு மேற்கொண்டதில் இன்று தடையை மீறி , விற்பனைக்காக வைத்திருந்த 60கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர். அதோடு உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags : மதுரையில் விற்பனைக்காக வைத்திருந்த 60கிலோ இறைச்சி பறிமுதல்-அபராதம்



















