காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

by Staff / 23-11-2023 05:26:16pm
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள காலகோட் காட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அப்போது நடந்த மோதலில் 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதியின் பெயர் குவாரி எனத் தெரியவந்துள்ளது. இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via