பேருந்து மீது மோதிய பிக்கப் வாகனம்..10 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் சேலம்பூர் பகுதியில் உள்ள படான்-மீரட் மாநில நெடுஞ்சாலையில் இன்று (ஆகஸ்ட் 18) பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்து ஒன்றும் பிக்கப் வாகனமும் மோதிக்கொண்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரக்ஷாபந்தன் பண்டிகையை கொண்டாட காஜியாபாத்தில் இருந்து பேருந்தில் வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
Tags :