வயநாட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இஸ்ரோ

by Staff / 02-08-2024 12:42:03pm
வயநாட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் இஸ்ரோ

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதியில் ராணுவத்துடன் இணைந்து இஸ்ரோ மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை ரிசாட் சார் (RISAT SAR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை இஸ்ரோ வழங்கி உள்ளது. இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்துள்ளது.

 

Tags :

Share via